Trending News

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்களிப்பு தொடர்பான சுற்றுநிரூபம்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம் உரிய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக இம்மாதம் 30ஆம் திகதி இரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் எனவும் குறித்த இந்த கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பூர்த்திசெய்வதற்குரிய 2018ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக அல்லது 1919 தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Rescued Thai cave boys in good health

Mohamed Dilsad

உலக உதைபந்தாட்டக் கிண்ணம் இன்று மக்கள் பார்வைக்கு

Mohamed Dilsad

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

Mohamed Dilsad

Leave a Comment