Trending News

மின் உற்பத்தி நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – கடும் மழையின் காரணமாக மின் உற்பத்தி நீர்த் தேக்கங்களில் நீரின் அளவு 84 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மின் சக்தி மற்றும் எரிசத்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளரும் ஊடக பேச்சாளருமான சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

இதற்கு அமைவாக காசல்ரி நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 94.06 சதவீதமாகவும், மவுஷாகெலே நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 91 சதவீதமாகவும், கொத்மலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 86.08 சதவீதமாகவும், விக்டோரியா நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 80.01 சதவீதமாகவும், ரன்தெனிகல நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 53.04 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

சமநலவேவ நிர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர் மூலமான மின் உற்பத்தி 45 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி

Mohamed Dilsad

Gin Ganga’s water level increases

Mohamed Dilsad

கிண்டல் செய்பவர்கள் மீது நித்யாமேனன் கடும் கோபம்

Mohamed Dilsad

Leave a Comment