Trending News

பிரதமரை சந்திக்கவுள்ள ஜே.வீ.பி

(UTV|COLOMBO) ஜே.வீ.பி இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்ககோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதற்கமைய இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் ஜே.வீ.பியை அங்கத்துவப்படுத்தும் வகையில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், சுனில் ஹத்துனெத்தி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

කුරුණෑගල ස්ථාන තුනක සිදුවූ නායයෑම්වලින් 09 දෙනෙක් ජීවිතක්ෂයට ; 24 දෙනෙකු අතුරුදන්

Editor O

අශේන්, කොළඹින් ගෑස් සිලින්ඩරයෙන් පාර්ලිමේන්තු මැතිවරණයට

Editor O

இயற்கை அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment