Trending News

UPDATE-ஞானசார தேரருக்கு 06 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி அவருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோரால் இந்த தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. .


பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு குறித்த மனு தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான நீதியரசர் ப்ரதீ பத்மன் சுரசேன மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய குழாமினால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Hundreds released after US immigration raids

Mohamed Dilsad

தனிக்கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?

Mohamed Dilsad

බැංකු සමග ගනුදෙනු කිරීමේදී ජාතික හැඳුනුම්පත් අංකය අනිවාර්යය කෙරේ.

Editor O

Leave a Comment