Trending News

கடந்த 03 மாதங்களில் 720 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO)-கடந்த மூன்று மாத காலத்தில் சமூக ஊடகங்கள் சம்பந்தமாக 720 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு கூறியுள்ளது.

அந்த முறைப்பாடுகளில் அதிகமானவை பேஸ்புக் சம்பந்தமாக கிடைத்திருப்பதாக அந்த பிரிவின் ஊடகப் பேச்சாளர் பாதுகாப்பு பொறியிலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறினார்.

அந்த முறைப்பாடுகளில் நூற்றுக்கு 75 வீதமானவை போலிக் கணக்குகளை இயக்கிச் செல்வது தொடர்பானவை என்று கணினி அவசர நடவடிக்கை பிரிவு கூறியுள்ளது.

டுவிட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் சம்பந்தமாகவும் கடந்த மூன்று மாத காலத்தில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அந்த முறைப்பாடுகள் சம்பந்தமாக தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

දේශමාන්‍ය කෙන් බාලේන්ද්‍ර අභාවප්‍රාප්ත වෙයි.

Editor O

போதுமான அளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது-அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

Mohamed Dilsad

ஹபரகட வசந்தவின் மனைவி கைது

Mohamed Dilsad

Leave a Comment