Trending News

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

கிழக்கு,ஊவா, மத்தியமற்றும்வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையேமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

 

ஏனைய இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

 

மேல்,கிழக்கு, ஊவா, மத்திய தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும்சில பகுதிகளில் (100 மி.மீக்கும் அதிகமான) பலத்த மழைபெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு40 கிலோமீற்றர்வரையிலான) ஓரளவு பலத்த காற்று வீசுமெனஎதிர்பார்க்கப்படுகின்றது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு என்று வளிமண்டளவியள் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

අස්වැසුමෙන්, හිත රිදුන අයට අස්වැසුමක්

Editor O

ව්‍යවස්ථාදායක සභාවට මාලිමාවේ ඉත්තෙක් දැමීමේ අගමැතිගේ උත්සාහයට විපක්ෂ නායකගෙන් දැඩි විරෝධය

Editor O

காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக இளவரசர் சார்லஸ்

Mohamed Dilsad

Leave a Comment