Trending News

அதிரடியாக விடுக்கப்பட்டுள்ள செய்தி….!!!

(UTV|COLOMBO)-பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படுகின்ற இராணுவ வீரரான பிரியங்க பெர்னான்டோ இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் இலங்கை வரவுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களை எச்சரிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார் என பிரியங்க பெர்னான்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதியின் உத்தரவில் அவர் மீண்டும் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரியங்கர பெர்னான்டோவின் பாதுகாப்பு மற்றும் தூதரகத்தின் நற்பெயரை கருத்தில் கொண்டு அவர் மீண்டும் அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

මාලිමා මන්ත්‍රීවරයාගේ සිද්ධියේ පොලිස් නිලධාරියාට ඇප….

Editor O

வவுனியா பள்ளிக்கடைகளை தீக்கிரையாக்கிய சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும்-அமைச்சர் ரிஷாட்

Mohamed Dilsad

Female inmates protest against delays in Court cases

Mohamed Dilsad

Leave a Comment