Trending News

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

(UTV|COLOMBO) பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்வோரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக பொலிஸாருடன் இணைந்து விஷேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதன் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் சம்மந்த குமார கித்தலவ ஆராச்சி இது தொடர்பாக தெரிவிக்கையில் பாடசாலையை பாதுகாக்கும் குழுக்களின் பங்களிப்பு இதற்காக பெற்றுக் கொள்ளப்படும் என்றார்.

இளம் வயதிற்கு உட்பட்டவர்கள் விடேமாக 6 ஆம் 7ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்கள் இதில் கூடுதலாக ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் உண்டு. குறிப்பாக இந்த வகுப்புக்களில் உள்ள மாணவர்கள் அனைவரும் இதில் ஈடுபடுவார்கள் என்று கூற முடியாது.

இவர்களை இதில் உள்வாங்குவதற்கு சிலர் முயற்சிப்பார்கள். இவ்வாறான மாணவர்களையே இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் கூடுதலாக கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்கு பொலிஸார் மூலோபாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

 

Related posts

காட்டு யானையின் தாக்குதலில் இரண்டு சிறுமிகள் பலி

Mohamed Dilsad

Tuchel replaces Emery as PSG boss

Mohamed Dilsad

14 Chinese Nationals remanded for a year

Mohamed Dilsad

Leave a Comment