Trending News

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அரசியல் சபை

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மத்திய செயற்குழுவுவை விட உயரிய 15 உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் சபை ஒன்றை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற அகில இலங்கை செயற்குழுவில் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர கட்சியின் யாப்பு சீர்திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறினார்.

தேர்தலை நடத்துதல் அல்லது பாராளுமன்றத்தை கலைத்தல் அல்லது மக்கள் கருத்துக் கணிப்பு இடம்பெறாது என்று ஜனாதிபதி இதன்போது கூறியதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச கூறினார்.

 

 

 

 

Related posts

சூரியவௌ மைதானம் புனரமைப்பு

Mohamed Dilsad

China launches first cargo spaceship

Mohamed Dilsad

Police investigate death of ten-month old twins

Mohamed Dilsad

Leave a Comment