Trending News

இறால்களினுள் கஞ்சா செலுத்தும் அமெரிக்க உணவகம்…

(UTV|AMERICA)-அமெரிக்க உணவகம் ஒன்று இறால்களை கொல்லும் முன்பு அவற்றுக்கு கஞ்சா மூலம் போதையூட்டுகிறது.

அமெரிக்காவில் அமைத்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் இறால்களை கொல்லும் முன்பாக அவற்றினுள் போதையூட்டும் நிகழ்வு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறால்களின் தரம் மற்றும் சுவைக்கு வேண்டி இவ்வாறு போதையூட்டப்படுவதாக, அந்த உணவு விடுதியின் உரிமையாளர் சார்லட் கில் கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, இறால்கள் கொதிக்கவைக்கப்படும் நீரில் கஞ்சா புகையை செலுத்துவது அவற்றைக் கொல்லும்போது உண்டாகும் வலியைக் குறைக்கும் முயற்சியாகும்.

எனினும், அவற்றை உண்பவர்களுக்கு இதன் மூலம் போதை உண்டாகாது. ஆனால், அந்த உயிரினம் வலியை அதிகம் உணராமல் உயிரிழக்கும் என்றார்.

ஆனால்,கொதி நீரில் போட்டு இறால்கள் கொல்லப்படுவது அவற்றை கடுமையான வேதனைக்கு உள்ளாக்கும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

எனினும், அமெரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமாக்கப்பட்டதால், நண்டுகளும் கொல்லப்படும்போது இத்தகைய வலிக்கு உள்ளாவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வலம்புரி சங்குடன் நபர் ஒருவர் கைது

Mohamed Dilsad

இசுருபாய அருகில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

Mohamed Dilsad

Broad steps to uplift agricultural sector & agri-based economy – President

Mohamed Dilsad

Leave a Comment