Trending News

பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-கதிர்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பொலிஸ் புலனாய்வு தங்காளை பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

இன்று காலை 6.50 மணியளவில் கதிர்காமம் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட குரோதம் காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

සත්‍ය සහ සංහිදියා යාන්ත්‍රණය සඳහා වන අන්තර්වාර ලේකම් කාර්යාලය මොණරාගල දී

Editor O

பேச்சுவார்த்தை தோல்வி; புகையிரத வேலை நிறுத்தம் தொடரும்

Mohamed Dilsad

අධිකරණ තීන්දුව ක්‍රියාත්මක කරන්න එපා – පා.ම. ලක්මාලි හේමචන්ද්‍ර

Editor O

Leave a Comment