Trending News

சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதில் தாமதம்

(UTVNEWS | COLOMBO) – எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா, பைசல் காசிம் ஆகியோர் பதவியேற்பதில் தாமதமேற்பட்டுள்ளது.

தோப்பூர்கல், முனை விவகாரங்கள் தொடர்பில் சரியான இணக்கமொன்று எட்டப்படாத நிலையில் அவர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்கவிரும்பவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் நேற்று மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வைபவத்தின்போதே இந்தப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பதவி துறந்திருந்த அமைச்சர்களில் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா, பைசல் காசிம் ஆகிய மூவரும் நேற்று பதவியேற்கவில்லை.

Related posts

வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு..

Mohamed Dilsad

“மர்ஹூம் ரஹ்மானின் நல்ல சிந்தனைகளை இறைவன் பொருந்திக்கொள்ள பிரார்த்திக்கிறேன்” -மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

Mohamed Dilsad

දෙහිවල පවත්වාගෙන ගිය මත්ද්‍රව්‍ය බෙදා හැරීමේ මධ්‍යස්ථානය වැටලු අයුරු(වීඩියෝ)

Mohamed Dilsad

Leave a Comment