Trending News

பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதியின் பிணை கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு பு

(UTV|BRAZIL) பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூய்ஸ் இனாசியோ லூலா த சில்வாவின் பிணை கோரிக்கை அந்நாட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டினால் 12 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள லூலா த சில்வா, தமக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.இருப்பினும் மேன்முறையீடு தொடர்பிலான தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் தாமதப்படுத்தியுள்ளது.

அத்துடன், 73 வயதான லூலா த சில்வாவின் பிணைக் கோரிக்கையையும் நிராகரித்து, வழக்கு விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது.

 

 

Related posts

President Sirisena and Indian Premier Modi in telephone conversation

Mohamed Dilsad

மண்சரிவு காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு

Mohamed Dilsad

අනුරාධපුර බන්ධනාගාර අධිකාරීවරයා යළි රිමාන්ඩ්

Editor O

Leave a Comment