Trending News

டெங்கு நோய் தொற்று காரணமாக 1300க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவு

(UTV|COLOMBO)  கடந்த நான்கு மாத காலப்பகுதியினுள் காலி மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று காரணமாக 1300க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

காலி – தெற்கு கடற்படை முகாமிலுள்ள முப்பதிற்கும் அதிகமான சிப்பாய்கள் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய  காலி தெற்கு கடற்படை முகாம் வளாகத்தில் டெங்கு நுளம்பு குடம்பிகள் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஒருவார காலப்பகுதியினுள் டெங்கு குடம்பிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

Afternoon thundershowers expected in most parts of the island

Mohamed Dilsad

සීතාවකට විවෘත ඡන්දයක් ඉල්ලා, සාරාංගිකාට එරෙහිව, මන්ත්‍රීවරු අධිකරණයට යති.

Editor O

ජනාධිපති විශේෂ තීරණ කිහිපයක් ගනී,

Editor O

Leave a Comment