Trending News

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையே மூன்று உடன்படிக்கைகள்

(UTV|COLOMBO) இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி குறித்த விசேட மூன்று உடன்படிக்கைகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன அரசாங்கத்திற்கு இடையில் இன்றைய தினம் கைச்சாத்திடப்படவுள்ளன.

அந்நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்துள்ள நிலையில், இதன்போது அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மேற்கொண்ட விசேட கோரிக்கைக்கு அமைய காவல்துறை திணைக்களத்திற்காக புதிய ஜீப்வண்டிகள் நூறை வழங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

 

Related posts

“Restore normalcy and not an opportune time for NCM” – Dayasiri Jayasekara

Mohamed Dilsad

විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස මහතාගේ වත්කම් සහ බැරකම් මෙන්න

Editor O

වෘත්තිකයන්ගේ බලපත්‍ර අවලංගුකර, වාහන ගෙන්වන්නේ, ජවිපෙ පක්ෂ කාඩර්වරුන්ට දෙන්නද..? – පාඨලී චම්පික

Editor O

Leave a Comment