Trending News

அமெரிக்கா விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் நாடு திரும்பினார்

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை நாடு திரும்பினார்.

இன்று மாலை 3.55 மணியளவில் பிரதமர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த விஜயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மற்றும்  பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பட்ரீசியா ஸ்கொட்லன்ட் ஆகியோரை  சந்தித்தார்.

நிவ்யோர்க்கில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி காரியாலயத்தில் பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கை மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் நெருக்கம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பெட்டீரிசியா ஸ்கொட்லன்டை இலங்கை வருமாறு பிரதமர் இந்த சந்திப்பின் போது அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம்

Mohamed Dilsad

දළදා වන්දනාවේ අවසන් දිනය අදයි

Editor O

சவூதி அரேபிய ஊடகவியலாளர் குறித்த விசாரணை வௌிப்படையாக இருக்க வேண்டும்

Mohamed Dilsad

Leave a Comment