Trending News

தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய விரிவுரையாளர்

(UDHAYAM, COLOMBO) – தனது 8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் அண்மையில் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

43 வயதான குறித்த சந்தேக நபர், பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இவர் தனது மகளை இவ்வாறு நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மகள் அண்மையில் தனது தாயிற்கு கூறியுள்ளார்.

பின்னர் தாய் இது தொடர்பில் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், சந்தேக நபரான பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார்.

எனினும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

8 அங்குலம் நீளமான விமான தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

Mohamed Dilsad

Army briefs Thai University Delegation on reconciliation projects in Jaffna

Mohamed Dilsad

Norwegian State Secretary in Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment