Trending News

ஒருமித்த இலங்கை நாட்டிலே அதிக பட்ச அதிகாரப் பகிர்வினை அனைவருக்கும் வழங்குவேன்

(UTVNEWS | COLOMBO) –ஒருமித்த இலங்கை நாட்டிலே அதிக பட்ச அதிகாரப் பகிர்வினை அனைவருக்கும் இன,மத மொழி கட்சி பேதங்கள் இன்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் என்னுடைய அரசாங்கத்தில் முன்னெடுப்பேன் என்பதை உறுதியாக இந்த மன்னார் மண்ணிலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அமைச்சர்களான ரிஸாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் ரி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டதோடு, உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகள் என பல ஆயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டனர்.

Related posts

கொழும்பின் பல பாகங்களுக்கு 18 மணிநேர நீர்வெட்டு

Mohamed Dilsad

P. B. Jayasundara appointed President’s Secretary

Mohamed Dilsad

President inaugurates Narcotics and Organised Crimes hotline for public

Mohamed Dilsad

Leave a Comment