Trending News

தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தின் மூலம் தரவுகளை திருட முற்பட்ட 4 வெளிநாட்டவர்கள் கைது

(UTV|COLOMBO) – கடந்த 12ஆம் திகதி பண்டாரமுல்ல, மிரிஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தின் (ATM) மூலம் பண அட்டை (Debit/ Credit Card) தரவுகளை திருட முற்பட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் நேற்று (16) மாலை மிரிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

கொட்டவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரமுல்ல, மிரிஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றுக்கு சொந்தமான தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்திலிருந்தே குறித்த சந்தேகநபர்கள் இவ்வாறு தரவுகளை திருட முற்பட்டுள்ளனர்.

ஏ.ரி.எம். இயந்திரம் அமைந்துள்ள கூடத்திற்குள் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் நுழைந்து, ஏ.ரி.எம் இல் தரவுகளை திருடும் நோக்கத்திற்காக இலத்திரனியல் சாதனங்களை பொருத்தியதாக கொட்டவில பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரையும், இன்று (17) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாதாள உலகத்தினரை ஒழித்துக் கட்டுவதற்காக கடுமையான தீர்மானங்கள் அவசியம்- பொலிஸாருக்கு பணிப்பு

Mohamed Dilsad

ස්ථාවර රටක් ගැන පාරම්බාන ආණ්ඩුව, ජනවරම දුවිල්ලක් තත්ත්වයට පත් කරලා. – විපක්ෂ නායක

Editor O

Sri Lankan squad for the Twenty20 tournament against England announced

Mohamed Dilsad

Leave a Comment