Trending News

29 ஆயிரத்திற்கும் அதிகமான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – துபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 29,000 க்கும் அதிகமான சிகரெட்டுக்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி 16 இலட்சத்திற்கும் அதிகம் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேகாலை-வரகாபொல பகுதியை சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இலண்டன் பிரிஜ் : இலங்கையருக்கு பாதிப்பில்லை

Mohamed Dilsad

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய பிரதமர் அனுதாபம்

Mohamed Dilsad

அனர்த்தத்தினால் கடவுச்சீட்டுக்களை இழந்தோர் விண்ணப்பிக்க முடியும்

Mohamed Dilsad

Leave a Comment