Trending News

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்திருந்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அமெரிக்கா பிரஜாவுரிமை பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் குடியுரிமை சட்டம் மற்றும் தேர்தல் சட்டம் என்பவற்றை மீறி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் கோரிக்கை விடுத்திருந்தது.

குறித்த கோரிக்கையையே கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

Related posts

මාලිමා සභාපති, සජබ මන්ත්‍රීවරියකට බැනවැදීම ගැන පොලීසිය ට පැමිණිල්ලක්

Editor O

முக அழகை அதிகரிக்க உப்பை எப்படி பயன்படுத்தலாம்

Mohamed Dilsad

Coalition raids target Houthi operations room in Yemen’s Al-Baydah

Mohamed Dilsad

Leave a Comment