Trending News

பிரதமர் தலைமையில் ஆறாயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) பிரதமர் தலைமையில் புதிதாக ஆறாயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி உதவி வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று அம்பாறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 01.00 மணியளவில் இச் சமுர்த்தி வழங்கும் திட்டம் அம்பாறை மாவட்டத்தில்  அம்பாறை நகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் ஆறு லட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆரம்ப நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாகும் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். இதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

Related posts

ஜனாதிபதி – அரசாங்க அதிபர்கள் இடையே விசேட கலந்துரையாடல்

Mohamed Dilsad

ஈராக் போராட்டத்தின் வன்முறையில் ஒருவர் பலியானதுடன் 24 பேர் படுகாயம்

Mohamed Dilsad

‘நாம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்துக்கள் குறித்த செய்தியை எத்திவைப்பதற்கு உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்துங்கள்’

Mohamed Dilsad

Leave a Comment