Trending News

காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு

(UTV|NEPAL) நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாள தலைநகரான காத்மண்டுவில் நேற்று, சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் காத்மண்டுவின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள நேபாள இராணுவம் மற்றும் ஆயுதமேந்திய பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

 

Related posts

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

Mohamed Dilsad

Singapore Premier ‘very glad’ negotiations for FTA with Sri Lanka went smoothly

Mohamed Dilsad

சமைப்பதன் மூலம் டென்ஷனை குறைத்துகொள்ளும் பிரிட்டன் பிரதமர்

Mohamed Dilsad

Leave a Comment