Trending News

பாராளுமன்றம் இன்று(24) முற்பகல் கூடுகிறது

(UTV|COLOMBO) பாராளுமன்றம் இன்று(24) முற்பகல் 10.30 அளவில் கூடவுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த விவாதத்தை இன்றைய நாள் முழுவதும் நடத்த நேற்று(23) கூடிய கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற் கொண்டு அவசரகால சட்டம் தொடர்பான யோசனை இன்றைய தினம் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று(23) பாராளுமன்றில் உரையாற்றியபோது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Afternoon thundershowers to lash Sri Lanka today

Mohamed Dilsad

ஒலுவில் துறைமுகம் – துரித கதியில் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

Mohamed Dilsad

சுதேசிய வைத்திய கல்லூரி கல்வி நடவடிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment