Trending News

இரண்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) மாத்தறை நகரத்தில் இரண்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டும் துப்பாக்கி பாகங்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் பெலியத்தை, பாலடுவ மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

 

 

 

Related posts

“Farmers in the North need not sell their harvest to black marketers” – Minister Rishad Bathiudeen

Mohamed Dilsad

வைரலாகும் நடிகர் விஜயின் வீடியோ..!

Mohamed Dilsad

UK Parliament rejects Brexit deal, Theresa May to face no-trust vote

Mohamed Dilsad

Leave a Comment