Trending News

களுத்துறையின் சில பிரதேசங்களுக்கு இன்று நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO)-கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீர் விநியோகிக்கப்படும் களுத்துறையின் சில பிரதேசங்களுக்கு இன்று(29) காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ள தாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி வாத்துவை , வஸ்கடுவ, பொதுபிட்டி, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த, நாகொடை, மக்கொன, பேருவளை மற்றும் அளுத்கம போன்ற பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் இன்று(29) துண்டிக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

 

 

 

 

Related posts

ඇමති රිෂාඩ්ට එස්.බී ගෙන් ලැබුණු ආරධනාවේ හඬ පටය මාධ්‍යට නිකුත් වෙයි

Mohamed Dilsad

ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னால் தலைவர் அபுசாலி மரணமானார்

Mohamed Dilsad

Japan Grants 327 Million Rupees To Enhance Public Security

Mohamed Dilsad

Leave a Comment