Trending News

3 மாத கர்ப்பிணி மாட்டை கற்பழித்த காமுகர்கள்?

(UTV|INDIA)-ஆந்திராவில் கர்ப்பிணி மாட்டை சில மனித மிருகங்கள் கற்பழித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெருகிக்கொண்டே போகிறது. இது ஒரு புறம் இருக்க சமீபகாலமாக சில மனித மிருகங்கள் விலங்குகளை கூட விட்டுவைக்காமல் அதனை பாலியல் வன்கொடுமை செய்து வருகின்றனர். சமீபத்தில் வட இந்தியாவில் காமுகர்கள் குடிபோதையில் நாயை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இந்நிலையில் ஆந்திராவில் விவசாயி ஒருவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த பசு மாடு காணாமல் போனது. அதிர்ச்சியடைந்த அவர் அருகில் தேடிய போது அந்த மாடு மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

அருகில் சென்று பார்த்தபோது மாட்டின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. மாட்டை பரிசோதித்த மருத்துவர்கள் அது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

யாரோ சில மனித மிருகங்கள் தான் இந்த வேலையை செய்திருக்க கூடும். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கொடுமை என்னவென்றால் அந்த பசு மாடு 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறது.

 

 

 

 

Related posts

ஶ்ரீதிவ்யாவுக்கு விரைவில் திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா..?

Mohamed Dilsad

SLC நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பில் தடவியல் அறிக்கை சமர்பிக்க உத்தரவு

Mohamed Dilsad

Core Group on Sri Lanka to submit resolution at UNHRC

Mohamed Dilsad

Leave a Comment