Trending News

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-இன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் அது விருத்தியடைந்து இலங்கையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் (குறிப்பாக கேகாலை, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில்) சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஒஸ்கார் வரலாற்றில் இப்படி ஆகிவிட்டதே!

Mohamed Dilsad

மழை மற்றும் காற்றுடனான வானிலை

Mohamed Dilsad

Lasantha Wickrematunge Murder: Former DIG, SI granted bail

Mohamed Dilsad

Leave a Comment