Trending News

அதிக மதிப்பெண் போடுவாதாக கூறி ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் கேட்ட அந்த விடயம்…

(UTV|GERMANY)-ஜேர்மனியில் மாணவிகளின் நிர்வாண புகைப்படத்தைக் கொடுத்தால் அதிக மதிப்பெண்கள் தருவதாக கேட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் Salzgitterஇல் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் ஒருவர் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒரு 14 வயது மாணவியிடம் அவள் தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பினால் அவளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுப்பதாக ஆசை காட்டியுள்ளார்.

அந்த மாணவி, குறைவான மதிப்பெண்கள் எடுத்திருப்பது குறித்து பெற்றோரிடம் கூற பயந்து தனது நிர்வாணப் படங்கள் இரண்டை அந்த ஆசிரியருக்கு ஏற்கனவே அனுப்பி விட்டதாக பொலிசாரிடம் தெரிவித்தாள்.

அந்த ஆசிரியருக்கு 5000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு 10 மாதங்கள் அவர் பொலிசரின் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருப்பார்.

அந்த ஆசிரியர் வேறு இரண்டு மாணவிகளிடம் தன்னை முத்தமிட்டால் அதிக மதிப்பெண் அளிப்பதாகக் கூறியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

WORLD WATER DAY 2018: MIND-BLOWING FACTS ABOUT THE LIFEBLOOD OF PLANET EARTH

Mohamed Dilsad

නාමල් රාජපක්ෂ සහ සුමන්තිරන් අතර හමුවක්

Editor O

ஜனாதிபதியையும் பிரதமரையும் ஆஜராகுமாறு மேல் நீதிமன்றம் உத்தரவு

Mohamed Dilsad

Leave a Comment