Trending News

13 பவுண் நகைகளுடன் தலைமறைவான தம்பதியினர் கைது

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாழையூற்று பிரதேசத்தில் கடந்த 3 மாதகாலமாக வாடகைக்கு வீடெடுத்து அயலவரின் நம்பிக்கையை சம்பாதித்து அவர்களின் 13 பவுண் நகைகளை கைமாறாக எடுத்துச் சென்று பின்பு தலைமறைவாக யாழ்ப்பாணம் நாவற்குழியில் பிரிதொரு வீட்டில் தங்கியிருந்த இளம் தம்பதியினரை விசேட தேடுதலின் பின்பு திருகோணமலை தலைமை பொலிசார் கைது செய்ததுடன் நகைகளையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற பதில் நீதிவானிடம் ஆஜர்படுத்தியபோது தம்பதியினரை 20 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர்களது 7 வயது குழந்தையை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறு பதில் நீதிவான் சுபாஷினி சித்ரவேல் உத்தரவிட்டார்.

Related posts

பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

විශ්වවිද්‍යාල සිසු පිරිසක් රැගත් බස්රථයක් බදුල්ල මහියංගන ප්‍රධාන මාර්ගයේ ප්‍රපාතයකට පෙරළෙයී. දෙදෙනෙක් මියයයි. 30ක අධික පිරිසකට තුවාල

Editor O

හිටපු ආගමන විගමන පාලක වරද පිළිගනී

Editor O

Leave a Comment