Trending News

கோட்டாபயவிற்கு எதிரான மனு விசாரணை 02 ஆம் திகதிக்கு

(UTVNEWS|COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதை தடுக்குமாறு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவிற்கு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பேராசிரியர் சந்திரகுப்தா தெனுவர மற்றும் காமினி விஜயங்கொட ஆகியோரால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Sobitha Thero’s plea to safeguard elephants in Sri Lanka

Mohamed Dilsad

Norway backs down in child protection scandal

Mohamed Dilsad

எனக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை என CID அறிவித்துள்ளதாக பிரதமர் கூறினார் – ரிஷாத்

Mohamed Dilsad

Leave a Comment