Trending News

கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு சட்ட நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) -கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு சட்ட நடவடிக்கை என எடுக்கவுள்ளதாக அமைச்சர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

எதுவித சட்ட அடிப்படைகளும் இன்றி, மக்களையும், அரசாங்கத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் இவ்வாறான நிறுவனங்களின் செயற்பாட்டை ஒரு போதும் அனுமதிக்க முடியாதென அவர் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கோதுமை மா அத்தியாவசிய உணவு பொருளாக உள்ள நிலையில் விலையை அதிகரித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட குறித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு – கண்டி வீதியில் வாகன நெரிசல்

Mohamed Dilsad

Met. Dept. warns of severe thundershowers

Mohamed Dilsad

ආණ්ඩුකාරවරු මැතිවරණ නීතිය උල්ළංඝනය කළාද ..? මැතිවරණ කොමිසමෙන් දැනුම්දීමක්

Editor O

Leave a Comment