Trending News

இன்று மீண்டும் விசேட தெரிவுக் குழு கூடுகிறது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக் குழு இன்று மீண்டும் இன்று முற்பகல் 11 மணி கூடவுள்ளது.

காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் இன்றைய தினம் தெரிவுக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் நாலக டி சில்வா, பாதுகாப்புச் செயலாளரான ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வு துறை பிரதானியான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் சிசிர மெண்டிஸ் ஆகியோர் தெரிவுக்குழு முன்னிலையில் ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Reginald Cooray sworn in as Northern Province Governor

Mohamed Dilsad

ආර්ථික ප්‍රතිසංස්කරණ සාර්ථකයි – රාජ්‍ය අමාත්‍ය ශෙහාන් සේමසිංහ

Editor O

Former WWE performer Matt ‘Rosey’ Anoa’i dies at 47

Mohamed Dilsad

Leave a Comment