Trending News

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) இன்று(05) காலை வாகனம் ஒன்றில் சுட்டிக்குளம் சாளை பகுதியில் வைத்து  கடத்தப்பட்ட சுமார் 115 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிஸார் இணைத்து மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

“Duty of strengthening Tri-Forces will be completely fulfilled” – President

Mohamed Dilsad

Tom Holland to play a young Nathan Drake for uncharted

Mohamed Dilsad

Fare meters made mandatory for three-wheelers from October

Mohamed Dilsad

Leave a Comment