Trending News

சட்டை ஊசியுடன் கூடிய பணிசை கொள்வனவு செய்த பெண்…

(UTV|COLOMBO)-சட்டை ஊசியுடன் கூடிய பணிசை கொள்வனவு செய்த பெண்ணிற்கு நட்டயீடாக ஒரு லட்சம் ரூபாவை வழங்குமாறு கொழும்பிலுள்ள தனியார் பிரபல உணவக உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷசீ மகேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த பெண் மருதானை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சட்டை ஊசியுடன் கூடிய பணிசை கொள்வனவு செய்துள்ளார்.

இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளருக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் , அதனை ஏற்க மறுத்த உரிமையாளர் குறித்த பெண்ணை தகாத வார்த்தைகளால் தூற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்தே குறித்த பெண் அந்த உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

 

 

 

Related posts

கொலை வழக்கில் சிக்கினாரா பாவனா? விசாரணையில் திடுக் தகவல்கள்!

Mohamed Dilsad

எதிர்வரும் 28ம் திகதி களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் ஆரம்பம்

Mohamed Dilsad

பாராளுமன்றம் கூட்டப்பட்டது சட்டத்துக்கு முரணானதா?

Mohamed Dilsad

Leave a Comment