Trending News

சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி

(UTV|CHILE)-தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் வால்டிவியா மாகாணத்தின் தலைநகர் வால்டிவியா மற்றும் மாபில் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது.

இந்த காரில் 10 மாத பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் ஒரு லாரி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி எதிர் திசைக்கு சென்ற லாரி அந்த வழியாக வந்த வேன் மீது மோதியது.

சங்கிலி தொடர் போல நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

 

 

 

 

Related posts

முஸ்லிம் மாணவனுக்கு பிணை மறுப்பு

Mohamed Dilsad

ලොව පළමු ඩිජිටල් බේකරිය

Mohamed Dilsad

தனது ஒலிம்பிக் வௌ்ளிப்பதக்கத்தின் விலையை வௌியிட்டார் சுசந்திகா!

Mohamed Dilsad

Leave a Comment