Trending News

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது

(UTV|COLOMBO)-ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யக்கோரி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

என​வே குறித்த மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தற்காலிகமாக தடுக்கும் வகையில் தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தும் குறித்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி  வெளியிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

තීරු බදු ගැන, ඇමෙරිකානු ජනාධිපතිගෙන් රුසියාවට එරෙහිව දැඩි ප්‍රකාශයක්

Editor O

ராஜஸ்தானில் கூடாரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Tamil Nadu Q branch police detain 6 Lankans

Mohamed Dilsad

Leave a Comment