Trending News

மறைந்த பிரம்மானவத்தே சீவலீ தேரர் தமிழ் மக்களின் உள்ளங்களையும் வென்றெடுத்தவர் – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – அமரபுர மகாசங்க சபையின் பதிவாளர் கலாநிதி பிரம்மானவத்தே சீவலீ தேரரின் மறைவு குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.

தெமட்டகொட நாகதீப விகாரையில் நீண்டகாலமாக இருந்து பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் உள்ளங்களையும் அவர் வென்றெடுத்ததாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் சிங்கள மொழிகளில் நூல்களை எழுதி பௌத்த சாசனத்தின் சுபீட்சத்திற்காகவும் தேரர் உழைத்தார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

தமிழ்மொழி நிபுணத்துவம் அறிவும் அவருக்கு இருந்தது. நாக விகாரையை பாதுகாக்க பாரிய அர்ப்பணிப்புக்களை அவர் மேற்கொண்டார் என்றும் பிரரதமர் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதேச, ஊர்வாதங்களைக் கடந்து உளத்தூய்மையுடன் பணி செய்தால் “அரசியல்” புனிதப் பணியாக அமையும்: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

Mohamed Dilsad

10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 5 பேர் கைது

Mohamed Dilsad

பாடசாலைகளை ஒருவாரம் தாமதித்து ஆரம்பிக்குமாறு கோரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment