Trending News

சுமார் 3 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) – மொரகஹஹேன பகுதியில் ரூபா 3 கோடிக்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(13) இரவு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 3 கிலோ கிராம் ஹெரோயின், அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

“Measures taken to ensure security during festive season” – Defence Secretary

Mohamed Dilsad

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைகளை இரகசியமான முறையில் மேற்கொள்ள தீர்மானம்

Mohamed Dilsad

பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த அவுஸ்திரேலிய

Mohamed Dilsad

Leave a Comment