Trending News

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 5 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது

பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 போட்டித் தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Related posts

புலமைப்பரிசில் நிதி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி

Mohamed Dilsad

England beat India for crucial win

Mohamed Dilsad

உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள்

Mohamed Dilsad

Leave a Comment