Trending News

சர்வதேச ரீதியில் தேயிலையை மேலும் மேம்படுத்த விஷேட கண்காட்சி

(UTV|COLOMBO) இலங்கை தேயிலைக்கு சர்வதேச வர்த்தக சந்தையில் தொடர்ந்து அமோக வரவேற்பு காணப்படுவதாக பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இலங்கை தேயிலைச் சபை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் விஷேட தேயிலைக் கண்காட்சி வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

மேற்படி ரஷ்யா, சீனா உள்ளிட்ட 12 நாடுகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வருடாந்தம் இலங்கைத் தேயிலை ஏற்றுமதி மூலம் 250 கோடி ரூபா வருமானமாகப் பெறப்படுவதாகவும் இலங்கைத் தேயிலை உற்பத்தி, தற்போது அதிகரித்திருப்பதாகவும் மேலும் பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

 

 

Related posts

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

Mohamed Dilsad

அனுஷ்காவுடன் இருக்கும் இந்த ஆண் யார்?

Mohamed Dilsad

Several Parliamentarians, Policemen injured following tense situation in Parliament [PHOTOS]

Mohamed Dilsad

Leave a Comment