Trending News

இன்று(02) முதல் முதல் புதிய வீதி

(UTV|COLOMBO) இன்று முதல் ராஜகிரிய ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகளுக்காக புதிய வாகன போக்குவரத்து திட்டமொன்றை செயற்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி , பாராளுமன்ற வீதியின் ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் , மேம்பாலத்திற்கு கீழ் வெலிகடை சந்தியில் கொடா வீதியின் ஊடாக ஆயுர்வேத சந்தி வரை பயணிக்கவுள்ளது.

இது வரை கொழும்பு நோக்கி வரும் பேருந்துகள் ஆயுர்வேத சந்தியில் இருந்து கொடா வீதிக்கு பிரவேசித்த நிலையில் , இதன் காரணமாக மற்றும் பயணிகள் அடிக்கடி வீதியை கடக்கின்றமையால் அதனை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Sangakkara urges Mathews and Hathurusingha to sort out their differences

Mohamed Dilsad

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமனம்

Mohamed Dilsad

Bangladesh closes day 2 on 133/2

Mohamed Dilsad

Leave a Comment