Trending News

கடும் வெப்பமுடனான வானிலை…

(UTV|COLOMBO) நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண வெப்பநிலையை விட 2 முதல் 4 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குருநாகல் பகுதியில் அதிக வெப்பநிலையாக 37.5 பாகை செல்சியஸாகப் பதிவாகியுள்ளதுடன், வவுனியா, அநுராதபுரம், கட்டுகஸ்தொட்டை, மஹா இலுப்பள்ளம ஆகிய பகுதிகளில் பகல் வேளையில் சாதாரண வெப்பநிலையை விட 3 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் 2 பாகை செல்சியசினால் வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், அநுராதபுரம், கொழும்பு, இரத்மலானை பகுதிகளில் இரவு வேளைகளில் 2 பாகை செல்சியசினால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

அமெரிக்கா பத்திரிக்கை நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

Mohamed Dilsad

கொழும்பில் இரண்டு பாதைகளில் போக்குவரத்து மட்டு

Mohamed Dilsad

John Steenhuisen to head South Africa’s opposition Democratic Alliance

Mohamed Dilsad

Leave a Comment