Trending News

கடும் வெப்பமுடனான வானிலை…

(UTV|COLOMBO) நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண வெப்பநிலையை விட 2 முதல் 4 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குருநாகல் பகுதியில் அதிக வெப்பநிலையாக 37.5 பாகை செல்சியஸாகப் பதிவாகியுள்ளதுடன், வவுனியா, அநுராதபுரம், கட்டுகஸ்தொட்டை, மஹா இலுப்பள்ளம ஆகிய பகுதிகளில் பகல் வேளையில் சாதாரண வெப்பநிலையை விட 3 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் 2 பாகை செல்சியசினால் வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், அநுராதபுரம், கொழும்பு, இரத்மலானை பகுதிகளில் இரவு வேளைகளில் 2 பாகை செல்சியசினால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

Malinga makes U-turn on retirement

Mohamed Dilsad

Indian National arrested with cocaine worth Rs. 15 million

Mohamed Dilsad

கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Mohamed Dilsad

Leave a Comment