Trending News

கோட்டாவின் கோரிக்கையை நிராகரித்த நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம்

(UTV|COLOMBO) டி.ஏ. ராஜபக்‌ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணம் தொடர்பிலான வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது நிராகரிக்குமாறு கோரிய கோரிக்கையானது விசேட நீதாய மேல் நீதிமன்றம் இன்று(11) நிராகரித்துள்ளது.

மெதமுலனையிலுள்ள, டி.ஏ. ராஜபக்‌ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணத்தின் போது ரூபா 33 மில்லியன் அரசாங்க நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கை, கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முதல் தினமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

 

Related posts

இடைக்கால அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை

Mohamed Dilsad

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

Mohamed Dilsad

News Hour | 06.30 am | 20.11.2017

Mohamed Dilsad

Leave a Comment