Trending News

கொழும்பின் பல பாகங்களுக்கு 18 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ளது.

நாளை இரவு ஒன்பது மணி முதல் மறுநாள் பிற்பகல் 3.00 மணி வரை இந்த மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு 01, 13, 14 ,15 மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகமே இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி மகிழ்ச்சி

Mohamed Dilsad

Cameron Monaghan to voice Superboy

Mohamed Dilsad

வில்பத்து விவகாரம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் அமைச்சர் ரிசாட் வலியுறுத்து…

Mohamed Dilsad

Leave a Comment