Trending News

நாளாந்தம் 500-600 டெங்கு நோயாளர்கள் பதிவு

(UTV|COLOMBO)-நாளாந்தம் 500 முதல் 600 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,743 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியநிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், யாழ். மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற வானிலையைத் தொடர்ந்தே, டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

மீண்டும் பாராளுமன்ற அமர்வு

Mohamed Dilsad

டெங்கு நோயால் பாடசாலை சீருடையை மாற்ற தீர்மானம்

Mohamed Dilsad

SLFP Central Committee to discuss party reforms today

Mohamed Dilsad

Leave a Comment