Trending News

கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு – 7 பேர் பலி

(UTV|AMERICA)-மெக்சிகோவின் குவிண்டினா ரோ மாகாணத்தில் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பிளயா டெல் கார்மன். இங்கு உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானவர்கள் குழுமி இருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலன்இன்றி இறந்தார்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

 

 

 

 

 

Related posts

International Nurses Day celebration under President’s patronage

Mohamed Dilsad

சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை விலக்கியமை தொடர்பில் குற்றச்சாட்டு

Mohamed Dilsad

தொடரும் விஷேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment