Trending News

இலங்கை நபர் ஒருவர் ஜப்பான் நாட்டில் கைது…

(UTV|COLOMBO)-இலங்கை நபர் ஒருவர் ஜப்பான் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் வாகனம் ஒன்றை திருடியமை, போக்குவரத்து விதிகளை மீறியமை மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த நபர் ஜப்பான் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான், புகுவோக (fukuoka) பொலிஸாரினால் 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த நபர் அனுமதியற்ற விதத்தில் மோட்டார் வாகனம் ஒன்றை எடுத்து குடி போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறித்த நபரை பின்தொடர்ந்து சென்ற போது போக்குவரத்து விதிகளை மீறி பயணித்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

New Zealand relief following floods in Sri Lanka

Mohamed Dilsad

சனிக்கிழமை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

Mohamed Dilsad

இன்று(25) முதல் நாள்தோறும் சுழற்சி முறையிலான மின் விநியோகத் தடை

Mohamed Dilsad

Leave a Comment