Trending News

சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் தலைமையில் விருது

(UTV|COLOMBO)-2016ம் ஆண்டு நிதியாண்டில் 101 அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சிறப்பான வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன.

குறித்த இந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று(05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்த நிதியாண்டில் நாடு முழுவதிலும் உள்ள 837 மொத்த அரச நிறுவனங்களில் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பல்வேறு பொருட்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உயர் செயற்பாடுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கு இந்த விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அரச கணக்காய்வு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு இந்த வைபவத்தை ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Jerusalem’s mayor suspends plan to impose tax

Mohamed Dilsad

DIG Vass jailed for five years

Mohamed Dilsad

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment